சட்டைமுனி
From Tamil Wiki
சட்டைமுனி (மகாஇருடி) தமிழ்ப்புலவர், வைத்தியர். அகத்தியர் காலத்தைச் சேர்ந்த புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சட்டைமுனி அகத்தியர் காலத்தைச் சேர்ந்தவர். புலவர், வைத்தியர். இவரின் ஆசிரியர் போகர் என்றும், மாணவர் பாம்பாட்டிச் சித்தர் என்றும் கூறுவர்.
இலக்கிய வாழ்க்கை
சட்டைமுனி ஞானநூறு என்னும் வேதாந்த நூலை எழுதினார். கல்ப்பநூறு, வாதநிகண்டு என்னும் நூல்களை எழுதினார். வாதநிகண்டு ரசவாத வித்தையைப் பற்றிய நூல். சட்டைமுனி திரிகாண்டம், சரக்கு வைப்பு, வாதவைப்பு, நவரத்தின வைப்பு ஆகிய நூல்களையும் எழுதியதாக ந.சி. கந்தையாபிள்ளை கருதினார்.
நூல் பட்டியல்
- ஞானநூறு
- கல்ப்பநூறு
- வாதநிகண்டு
- சட்டைமுனி திரிகாண்டம்
- சரக்கு வைப்பு
- வாதவைப்பு
- நவரத்தின வைப்பு
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.