குணசாகரர்
குணசாகரர் (பொ.யு. 11-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். அமிர்தசாகரரின் காரிகை இலக்கணத்திற்கு உரை செய்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
குணசாகரர் பொ.யு. 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அமிர்தசாகரரின் மாணவர் இவர். சமண மதத்தவர்.
இந் நூலால் பயன் யாதோ எனின், யாப்பாராய்தல் பயன். யாப்பாராயவே பா, தாழிசை, துறை, விருத்தங்களால் ஆக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் இவற்றின் மெய்மை அறிந்து, விழுப்பம் எய்தி, இம்மை மறுமை வழுவாமல் திகழ்வர். அதனால் இருமைக்கும் உறுதி பயப்பது யாப்பு எனக் கொள்க.
இலக்கிய வாழ்க்கை
குணசாகரர் இலக்கண நூலுக்கு உரை செய்த ஆசிரியர்களில் ஒருவர். தன் ஆசிரியர் அமிர்தசாகரர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை நூல்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார்.
சான்று
- யாப்பெருங்கலம்
யாப்பருங் கலனணி யாப்புற வகுத்தோன்
தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த
குணகடற் பெயரோன் கொள்கையில் வளாத்
துளக்கறு கேள்வித் துகடீர் காட்சி
அளப்பறுங் கடற்பெய ரருந்தவத் தோனே
நூல் பட்டியல்
- யாப்பருங்கலம் உரை
- யாப்பருங்கலக்காரிகை உரை
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.