காளிமுத்துப் புலவர்
From Tamil Wiki
காளிமுத்துப் புலவர் (பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். தனிப்பாடல்கள் பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
காளிமுத்துப் புலவர் “கடந்தூங்கு” எழும் பாடலில் பராக்கிரம பாண்டியனைப்(1422-1482) பற்றி பாடியதால் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என க. சுப்ரமணியபிள்ளை கருதினார்.
இலக்கிய வாழ்க்கை
காளிமுத்துப் புலவர் ஏழு தனிப்பாடல்கள் பாடினார். ஒவ்வொரு பாட்டும் ”வேலப்பன் மைந்தன் குருநாதன்” என முடியும். ஆனால் பாடல்கள் சிற்றின்ப சாரம் பொருந்தியது. இதில் ஏழாவது பாடல் தஞ்சி எனும் பெண் பற்றியது.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.