கதிரவேற் கவிராயர்
கதிரவேற் கவிராயர் (பொ.யு. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி) தமிழ்ப்புலவர். தனிப்பாடல்கள் பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கதிரவேற் கவிராயர் தரங்கம்பாடியில், வேளாளர் மரபில் பிறந்தார். சென்னபட்டணத்திலே ஸ்தாபிக்கப்பட்டிருந்த சதுர்வேத சித்தாந்த சபா பிரசங்கத் தமிழ்த் தலைமைப் புலமை நடத்திவந்தார்.
இலக்கிய வாழ்க்கை
கதிரவேற் கவிராயர் பாடும் பாக்கள் பளபளப்பும் இசைப் பொலிவும் இயைந்தவை. தனிப்பாக்கள் பல பாடினார். குடிவெறியரைச் சிட்சித்துக் குடிகேடர் மாலை என்னும் பாடலும் பாடினார். கிறிஸ்து மார்க்கத்துக்கு விரோதமாக கிறிஸ்துமத திமிர பானு எனும் நூலை எழுதினர். இதனை நிராகரித்துக் கிறிஸ்தவர்களால் கண்டனம் ஒன்று எழுதப்பட்டது.
பட்டம்
- கலாவல்லவர்
- அஷ்டாவதானி
நூல்கள் பட்டியல்
- குடிகேடர் மாலை
- கிறிஸ்துமத திமிர பானு
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.