வேதாந்த தீபிகை
From Tamil Wiki
வேதாந்த தீபிகை (1898) தமிழில் வெளிவந்த தொடக்ககால வைணவ இதழ். இதுவே முதல் வைணவ இதழ் என்றும் சொல்லப்படுவதுண்டு.
வெளியீடு
வேதாந்த தீபிகை ‘இஃது ஆரியன் ( டி.டி.ரங்காச்சார்யர்) என்பவரால் இயற்றப்பட்டு சென்னை: மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது, கோவிலூர் ஆண்டவர் நூலகம்’ என்னும் அறிவிப்புடன் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வேதாந்த தேசிகன் எழுதிய “அபீதிஸ்தவம்” என்ற ஸ்தோத்திரத்திற்கு ஸ்ரீ உப.வே. அன்பில் ஏ.வி. கோபாலாசார்யார் ஸ்வாமி தமிழில் வ்யாக்யானம் எழுதியுள்ளார்.