சே. இராஜாராமன்
சே. இராஜாராமன் (நீச்சல்காரன்)
வாழ்க்கைக் குறிப்பு
சே. இராஜாராமன் மதுரையில் பிறந்தார். மென்பொறியாளர். இயற்பியலில் பட்டம் பெற்ற இவர் சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
தமிழ் கணிணிக்கு செய்த பங்களிப்புகள்
நீச்சல்காரன் எனும் புனைப்பெயரில் அச்சிதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிக் கொண்டிருப்பவர். கணினித் தமிழில் ஆர்வம் கொண்ட இவர் நாவி எனும் சந்திப்பிழை திருத்தும் கருவி, வாணி எனும் பிழை திருத்தும் கருவி, ஓவன் எனும் ஒருங்குறி மாற்றிக் கருவி, சுளகு எனும் எழுத்தாக்கக் கருவி, மென்கோலம் - பல்குறியீட்டு எழுதிக் கருவி, நோக்கர் எனும் செயலி, வாணி தொகுப்பகராதி செயலி ஆகியவற்றைத் தமிழில் உருவாக்கி, அதனைத் தமிழ் ஆர்வலர்கள் பயன்பாட்டுக்காக நீச்சல்காரன் எனும் வலைத்தளம் வழியாக இலவசமாக வழங்கி வருகிறார்.
விருது
- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்ற முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2019)
- வல்லமையாளர் விருது (2015)
- கனடாவிலுள்ள தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பின் தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது (2015)
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.