தேவவரம் புத்தூல்ப்

From Tamil Wiki
Revision as of 08:07, 14 June 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "தேவவரம் புத்தூல்ப் (1802- (தேவவரம் முன்ஷி, தேவவரம் பிடல்ப்) == பிறப்பு, கல்வி == தேவவரம் மைலாடியில் முதலில் சீர்திருத்த கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மகாராஜன் வேதமாணிக்கம் குடும்பத்தி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தேவவரம் புத்தூல்ப் (1802- (தேவவரம் முன்ஷி, தேவவரம் பிடல்ப்)

பிறப்பு, கல்வி

தேவவரம் மைலாடியில் முதலில் சீர்திருத்த கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மகாராஜன் வேதமாணிக்கம் குடும்பத்தில் பிறந்தார். வேதமாணிக்கத்தின் தம்பி சிவனன் ரிங்கல்தௌபே முயற்சியால் மதம் மாறி ஞானாபரணம் ஆனார். அவர் மனைவி ஞானாயி ஆக மதம் மாறினார். அவர்களின் மகனாக 1802 ஆம் ஆண்டு பிறந்தார். புத்தூல்ப் என்பது கிறிஸ்தவ ஞானத்தகப்பனின் பெயர்.

தேவவரம் 1809 ஆம் ஆண்டு போதகர் ரிங்கல்தௌபே முதன் முதலாக மயிலாடியில் தொடங்கிய ஆங்கிலப் பாடசாலையில் பயின்றார். 1819 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் சார்ல்ஸ் மீட் தொடங்கிய இறையியல் பள்ளியில், அது தொடங்கப்பட்ட ஆண்டில் படித்த மாணவர்களுள் தேவவரமும் ஒருவர். இறையியல் மற்றும் ஆங்கிலக்கல்விக்காக தேவவரம் தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களுக்குச் செல்ல மீட் உதவினார் . ஜான் பால்மர் தமிழ் கற்றுக்கொண்ட திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் தேவவரமும் தமிழ் கற்றார்.

தனிவாழ்க்கை

தேவவரம் சென்னையில் படிப்பை முடித்த பின் சார்ல்ஸ் மீட்டின் உதவியாளராக நாகர்கோவிலில் பணியாறினார். சார்ல்ஸ் மீட் நெய்யூரில் பணியாற்றியபோது அங்கே அவருடைய உதவியாளராகப் பணியாற்றினார்.

மார்த்தாண்டம் மத்திகோடு சபையில் வேதமாணிக்கத்தால் மதம் மாற்றப்பட்ட முதல் சீர்திருத்தக் கிறிஸ்தவரான மாடன் மார்த்தாண்டனின் மகன் வேதமாணிக்கம் போதகர் தலைமையில், கொத்தனார்விளை ஆலயத்தில், தேவவரம் முன்ஷியின் மூத்த மகளான லோய்ஸ் புத்தூல்ப்பை சார்ல்ஸ் மீட் 1851 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நிகழ்ந்தது. இத்திருமணத்தினால் ஏற்பட்ட மனவருத்தத்தின் காரணமாகத் தம் பதவியை இராஜினாமா செய்த மீட் திருவனந்தபுரத்திற்குச் சென்று திருவிதாங்கூர் ரெஸிடெண்டின் உதவியாளராக ஆனார். தேவவரம் முன்ஷியும் அவருடன் சென்று திருவனந்தபுரத்தில் வாழ்ந்தார்

திருவனந்தபுரம் கிறிஸ்துநாதர் ஆலயத்தின்  தமிழ் வழிபாடு நடத்தும் பொறுப்பைப் பல ஆண்டுகள் ஏற்று நடத்தினார். இறுதிக்காலத்தில் மகன்னின் மரணம் இவர் உள்ளத்தை சோர்வடையச் செய்தது. லண்டன் மிஷன் சபையின் எதிர்ப்பும் தனிமைகொள்ளச் செய்தது. இகாரணங்களால் சில கையெழுத்துப் பிரதிகள் முடிவடைய வில்லை.

இலக்கியப்பணிகள்

தேவவரம் புகழ்பெற்ற கவிஞராகவும், கிறிஸ்தவ இறையியல் அறிஞராகவும் திகழ்ந்தார்.


               தேவவரம் முன்ஷியார் கவிஞராகத் திகழ்ந்ததுடன் ஜெபவீரராகவும் வாழ்ந்தார். நெய்யூரில் மீட் போதகருடன் தங்கியிருந்த காலத்தில் அவ்வூரின் மேற்குப் பகுதியிலுள்ள பாறையில் நீண்ட நேரம் தனித்திருந்து ஜெபம் செய்வது தேவவரம் முன்ஷியாரின் அன்றாட வழக்கமாகும்.

ஒரு முறை கவிஞர் ஜான்பால்மர், நத்தானியேல் செட்டியார், தேவவரம் முன்ஷியார் ஆகிய மூவரும் குமரி மாவட்டத்தின் பெரும் புகழ் பெற்ற உலக்கை அருவியைக் கண்டு களிக்கச் சென்றனர். உலக்கை அருவி நீர் விழும் அசம்பு மலையின் உயரமான பகுதியிலிருந்து ஜெபம் செய்ய ஆரம்பிக்கும்போது ஒருவரிடமும் வேதாகமம் இல்லாததை அப்போது உணர்ந்தனர். அவர்களிடையே முன்ஷியார் Ôஇயற்கை இறை மகிமையை உணர்த்துவது என்பதைத் தானே சங்கீதக்காரன் குறிப்பிடுகிறான்Õ எனக் கூறி ஒரு சங்கீதத்தைத் தன் விவிலிய அறிவால் விளக்கி,இறை வேண்டுதலும் செய்தார். ஜான்பனியனை அவர் நாட்டு மக்கள் பேராயர் என அழைத்ததைப் போன்று தேவவரம் முன்ஷியாரைத் தந்தை எனப் பொருள்பட ஐயா என்னும் மதிப்புடனேயே பாமரர்களும் அழைத்தனர்.

கீர்த்தனைகள்

தேவவரம் முன்ஷியார் எழுதியவற்றுள் ஒன்பது கீர்த்தனைகள் மட்டும் இன்று கிடைக்கின்றன. அவை பின்வருமாறு :

  • 1.            அடியேன் மனது வாக்கும்
  • 2.            அதிமங்கலக் காரணனே
  • 3.            இயேசு நாயகனைத் துதிசெய்
  • 4.            காரும் கிறிஸ்தேசுவே
  • 5.            சேரும் கிறிஸ்தேசுவே எனைச்சேரும்
  • 6.            தேவசுதன் பூவுலகோர்
  • 7.            நித்தமும் சிந்தித்து சிந்தித்து
  • 8.            வருவார் விழித்திருங்கள்
  • 9.            வாரும் தேற்றரவரே
பிற படைப்புகள்

               

1. வேதவிதிக்குறள்  

               திருவள்ளுவரின் திருக்குறளுக்கு இணையாகக் கிறிஸ்தவச் சமயக் கருத்துகளைக் குறள் வடிவில் தருவது இந்நூல்.  

2. திருட்டாந்த மாலை

               திருட்டாந்த மாலை என்னும் இந்நூல் கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை விவிலியச் சான்று வழிக் கூறுகின்றது. ஔவையாரின் மூதுரை நூலைப் பின்பற்றி இயற்றப்பட்டது திருட்டாந்த மாலை ஆகும். ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது. முதல் இரண்டு அடிகள் கிறிஸ்தவ நெறியைச் சுட்டுவனவாகும். இறுதி இரண்டு அடிகள் விவிலிய மேற்கோளாகவும் அமைந்துள்ளன.  

3. சிந்து கவிமாலை  

               பல்வேறு கீர்த்தனைகள் அடங்கிய நூல் சிந்து கவிமாலை ஆகும்.  

4. செம்மொழி மாலிகை  

               ஔவையாரின் ஆத்திச்சூடியைப் போன்று கிறிஸ்தவக் கருத்துகளைச் சுருங்கக் கூறி விளங்க வைக்கும் நூல் செம்மொழி மாலிகை என்பதாகும்.

5. சங்கீத வாரணம்

               தாவீதின் சங்கீதத்தைப் பாடல் வடிவில் தரும் நூல் இதுவாகும்.  

6. நல்லறிவின் சாரம்

               வினாவிடைப் பாடலாக விவிலியச் செய்திகளை இந்நூல் எளிமையாகத் தருகின்றது.

அகராதிப் பணி

               மேலை நாட்டுக் கிறிஸ்தவர்கள் செய்த அகராதிப்

பணியைத் தொடர்ந்தவர்களுள் தேவவரம் முன்ஷியாரும் ஒருவராவார்.

1. சதுரகராதி

               வீரமாமுனிவரின் சதுரகராதியைப் பின்பற்றி மேலும் நிறைவு செய்ய எழுதிய நூல் சதுரகராதி என்பதாகும்.

2. வினையகராதி (அ) பஞ்சகராதி  

               தமிழ்ச் சொற்களின் வேர்ச்சொல்லையும், வினைச் சொல்லையும் விளக்கும் வகையில் எழுதப்பட்ட வினையகராதி முழுமை பெறாததால் நூல் வடிவம் பெறவில்லை.

               வேத அகராதி  , பெயரகராதி   என்பனவும் அவரால் எழுதப்பட்ட பிற அகராதி நூல்களாகும்.

வெளியீட்டாளர்

               1830 இல் நெய்யூரில் அருள்திரு. மீட் போதகரால் தொடங்கப் பட்ட கைப்பிரதிக் கழகத்தில்  செயலர், முதன்மை எழுத்தர், மொழிபெயர்ப்பாளர் போன்ற பதவிகளின் மூலம் 150 வெவ்வேறு தலைப்புகளில் கைப்பிரதிகளை வெளியிட்டார். இக்கழகம் பல நூற்களையும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  தோமுனியார் என்று அழைத்து வந்தார்கள்

எனக் குறிப்பிட்டுள்ளமை நினைவில் கொள்ளத்தக்கது.

மறைவு

தேவவரம் முன்ஷி திருவனந்தபுரத்தில் 1874 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள் காலமானார். அவரது உடல் திருவனந்தபுரத்திலுள்ள கிறிஸ்துநாதர் ஆலயத்திலுள்ளக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.