under review

தம்பிமுத்துப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 21:41, 12 February 2022 by Ramya (talk | contribs)
தம்பிமுத்துப்பிள்ளை

தம்பிமுத்துப்பிள்ளை (1857-1921) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். எழுத்தாளர், பதிப்பாசிரியர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், மருத்துவர் என பண்முகம் கொண்டவர். ஈழத்தின் முதல் நாவலான ஊசோன் பாலந்தையை எழுதினார்.

பிறப்பு, கல்வி

இலங்கை, யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 1857-ல் சந்தியாகுபிள்ளை உடையாருக்கும், தங்கமுத்துவுக்கும் மகனாக தம்பிமுத்துப்பிள்ளை பிறந்தார். வாசவிளானியிலுள்ள கத்தோலிக்க பாடசாலையில் கல்வி பயின்றார். புத்தூர் மிஷன் பள்ளியில் ஆங்கிலம் பயின்றார்.

ஆசிரியர்கள்
  • ஆவரங்கால் வைத்திலிங்கம் மாஸ்ரர்
  • வாசவிளான் தம்பிமுத்து பரியாரியார்
  • அர்னோல்ட் சதாசிவம்பிள்ளை
  • வில்லியம் நெவின்ஸ்
  • புலவர் எறேமியஸ்
  • உடுப்பிட்டி சிவசம்பு
  • டேனியல் வேலுப்பிள்ளை

தனிவாழ்க்கை

1886 முதல் தன் தகப்பனாரின் பணியான உடையார் பணியை ஆற்றினார். விதானை வைரமுத்துவின் மகளான தங்கமுத்துவை மணந்தார். இவர்களுக்கு நான்கு மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தனர்.

இலக்கிய வாழ்க்கை

இளமையிலிருந்தே பக்திப் பாடலகளையும், கீர்த்தனைகளையும் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். ஈழ நாட்டின் முதல் நாவலான ஊசோன் பாலந்தைக் கதையை எழுதினார். இது ஞானப்பிராகச அச்சு இயந்திரத்தில் 1891-ல் பதிப்பித்தார். ஊசோன் பாலந்தை, மேகவர்ணன், தாமோதரன், இரத்தின சிங்கம், சந்திரகாசன் கதை முதலான நாவல்களைப் பதிப்பித்தார். அழகவல்லி (1904), சுந்தரன் செய்த தந்திரம் (1905), எஸ்தாக்கியர் நாடகம் (1890) போன்ற நாவலகளை இயற்றினார்.

நூல்கள் பட்டியல்

கும்மி
  • பாலியர் கும்மி (1886)
நாவல்கள் பதிப்பு
  • ஊசோன் பாலந்தை
  • மேகவர்ணன்
  • தாமோதரன்
  • இரத்தின சிங்கம்
  • சந்திரகாசன் கதை
இயற்றிய நாவல்
  • அழகவல்லி (1904)
  • சுந்தரன் செய்த தந்திரம் (1905)
  • எஸ்தாக்கியர் நாடகம் (1890)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.