மு. சாயபு மரைக்காயர்
மு. சாயபு மரைக்காயர் (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1951) தமிழ்ப் பேராசிரியர். எழுத்தாளர். கல்வி, இலக்கியம், ஆய்வு சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். சிறார்களுக்காகவும் பல நூல்களை எழுதினார். இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களித்தார். தனது இலக்கியப் பணிகளுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசின் விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
மு. சாயபு மரைக்காயர், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்காலில், ஆகஸ்ட் 25, 1951-ல், ஹாஜி முகமது அப்துல் காதர்-பாத்திமா உம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியைக் காரைக்காலில் உள்ள முஸ்லிம் வித்யா சங்கம் பள்ளியில் படித்தார். மாடர்ன் கல்லூரிப் பள்ளியில் எட்டாம் வகுப்பையும், கோவிந்த சாமிப்பிள்ளை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையும் பயின்றார். காரைக்கால், அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தார். வேதியியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.