குறமகள் இளவெயினி
From Tamil Wiki
Revision as of 21:33, 2 April 2023 by Ramya (talk | contribs) (Created page with "குறமகள் இளவெயினி சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == குறிஞ்ச...")
குறமகள் இளவெயினி சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
குறிஞ்சி நில மக்கள் எயினர், எயினி என்று அழைக்கப்படுவர்.
இலக்கிய வாழ்க்கை
குறமகள் இளவெயினி 157வது பாடல் பாடினார்.
பாடல்வழி அறியவரும் செய்திகள் =
ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
பாடல் நடை
தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தான்நா ணுதலும்,
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பின், கொலைவேல்,
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்:
ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை,
எற்படு பொழுதின், இனம்தலை மயங்கிக்,
கட்சி காணாக் கடமான் நல்லேறு
மடமான் நாகுபிணை பயிரின், விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே.