being created

வாயிலார் நாயனார்

From Tamil Wiki
Revision as of 00:06, 1 April 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "வாயிலார் நாயனார் சைவ அடியார்களாகிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இறைவனை மௌனமாக மானசீகமாக வழிபட்டவர் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது. == வாழ்க்கைக் குறிப்பு == வா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வாயிலார் நாயனார் சைவ அடியார்களாகிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இறைவனை மௌனமாக மானசீகமாக வழிபட்டவர் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

வாயிலார் நாயனார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் மார்கழி மாதம் ரேவதி விண்மீன் தினத்தன்று பிறந்தார். இவர் வாழ்ந்த காலம் தெளிவாக அறியவரவில்லை. பொ.யு. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் "தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" என்று கூறியிருப்பதாலும், இவர் 8-ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்று அறியலாம். பெரிய புராணத்தில்

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்

தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல

நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;

தன்மை வாயிலார் என்னும் தபோதனர்

'வாயிலார்' என்பதன் மூலம் மௌனமாய் வழிபாடு செய்தவர் எனக் கருதப்படுகிறது.


உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.