அக்கரசுதகம்
அக்கரசுதகம் அல்லது அட்சரசுதகம் என்பது சித்திரகவியில் ஓர் வகை. முழுவதும் நின்று ஒரு பொருள் பயப்பதாயும், ஒவ் வோரெழுத்தாக நீக்க வெவ்வேறு மொழியாய் வெவ்வேறு பொருள் தரக்கூடிய ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவது அக்கரசுதகமாகும். அக்கரம் (அட்சரம்) - எழுத்து. சுதகம் - குறைத்தல்.
விளக்கம்
பொற்றூணில் வந்தசுடர் பொய்கை பயந்த வண்ணல்
சிற்றாயன் முன்வனிதை யாகி யளித்த செம்மல்
மற்றியார்கொ லென்னின் மலர்தாவி வணங்கி நாளுங்,
கற்றோர் பரவுங் கநகாரி நகாரி காரி
இங்கே எடுத்துக்கொண்ட சொல்லுக் கநகாரி என்பது. அதன் முதலெழுத்தாகிய 'க'கரத்தை நீக்க ‘நகாரி' . ‘நகாரி யில் முதலெழுத்தாகிய நகரத்தை நீக்கக் காரி. கநகாரி என்ற சொல்லில் எழுத்துக்கள் குறைந்து நகாரி, காரி
கநகாரி- திருமால் -பொன்தூணிலிருந்து வந்த சுடர் (நரசிம்ம அவதாரம்)
நகாரி-முருகன் - சரவணப் பொய்கை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.