ஜே.வி. செல்லையா
From Tamil Wiki
ஜே.வி. செல்லையா (இருபதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் ஆளுமை. மொழிபெயர்ப்பாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜே.வி. செல்லையா இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்தார். வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் நீண்டகாலம் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1921-ல் அரசியலில் ஈடுபட்டு, வாலிபர் மாநாட்டு முதல் ஆண்டுத் தலைவராக இருந்தார். ஐம்பது ஆண்டுகள் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்திலுள்ள ஆங்கில நூல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1936-ல் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். பழந்தமிழ் இலக்கிய நூல்களைப் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
ஜே.வி. செல்லையா பத்துப்பாட்டு நூலை செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
நூல் பட்டியல்
- பத்துப்பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:செல்லையா, ஜே. வி: நூலகம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.