செ.மு. முகமது இப்றாகீம்
From Tamil Wiki
செ.மு. முகமது இப்றாகீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
செ.மு. முகமது இப்றாகீம் இலங்கை வேர்விலையில் செய்யது முகம்மதுக்கு மகனாகப் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
செ.மு. முகமது இப்றாகீம், முகம்மது நபியின் பேரில் 'அதிநூதன அலங்காரக் கீர்த்தனை' என்ற கீர்த்தனைகள் பாடினார். சாத்தான்குளத்தைச் சார்ந்த கா.மீ.மு. முகம்மது அசன் அவர்களின் உதவிகொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது.
நூல் பட்டியல்
- அதிநூதன அலங்காரக் கீர்த்தனை
உசாத்துணை
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.