இரகுநாதய்யர்
From Tamil Wiki
இரகுநாதய்யர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர், ஜோதிட அறிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
இரகுநாதய்யர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த கொக்குவில்லில் பிறந்தார்.
ஜோதிடம்
இரகுநாதய்யர் ஜோதிட ஞானம் பெற்றவர். வாக்கிய கணித பஞ்சாங்கத்தைக் கணித்து ஆண்டு தோறும் வெளியிட்டு வந்தார். இவர் தொடங்கிய பஞ்சாங்கம் இன்றும் தொடர்ந்து கணித்து வெளியிடப்பட்டு வருகிறது.
இலக்கிய வாழ்க்கை
இரகுநாதய்யர் பல சோதிடச் சுவடிகளை ஆராய்ந்து அச்சேற்றினார். போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை' என்ற நூலை 1892-ல் அச்சேற்றினார்.
நூல் பட்டியல்
பதிப்பித்தவை
- சரசோதிமாலை
- சோதிடச் சுவடிகள்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.