சின்ன ஆலிம் அப்பா இப்ரகீம் லெப்பை

From Tamil Wiki
Revision as of 16:09, 14 November 2022 by Ramya (talk | contribs) (Created page with "சின்ன ஆலிம் அப்பா இப்ரகீம் லெப்பை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == சின்ன ஆலிம் அப்பா இலங்கை மட்டக்களப்பு, மருதமுனையைச் சேர்ந்த இப்ரகீம்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சின்ன ஆலிம் அப்பா இப்ரகீம் லெப்பை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சின்ன ஆலிம் அப்பா இலங்கை மட்டக்களப்பு, மருதமுனையைச் சேர்ந்த இப்ரகீம் லெப்பை, சூறைப்பாத்தும்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார். தமிழிலும், அரபுமொழியிலும் மிகுந்த புலமையுடையவர். இந்தியாவுக்குச் சென்று மதக்கல்வி பயின்று திரும்பினார். ஆலிம் என்பது மதப் பேரறிஞரைக் குறிக்கிறது.

இலக்கிய வாழ்க்கை

சின்ன ஆலிம் அப்பா ’ஞானரை வென்றான்’ என்னும் நூலை எழுதினார். இந்நூல் மருதமுனை ஆசிரியர் சங்கத்தினரால் அச்சேற்றி வெளியிடப்பட்டது. மேலும் ஆண்டவனை மழை பெய்விக்கும்படி வேண்டுதல் செய்து இவர் பாடிய பாடல்கள் மழைக் காவியம் என்னும் பெயருடன் தொகுக்கப்பட்டன.

நூல் பட்டியல்

  • ஞானரை வென்றான்
  • மழைக் காவியம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆளுமை:சின்ன ஆலிம் அப்பா, இப்ரகீம் லெப்பை: noolaham