under review

குற்றிசை(பெருந்திணை)

From Tamil Wiki
Revision as of 19:28, 1 August 2025 by Logamadevi (talk | contribs)

குற்றிசை புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவியை தலைவன் இடையில் கைவிடுதல் பற்றிக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் தலைவனுடைய மார்பைத் தழுவிய தலைவியுடன் இறுதிவரை வாழாது இடையே கைவிடுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

பொன்தார் அகலம் புல்லிய மகளிர்க்கு
அற்றாங்கு ஒழுகாது அறம் கண் மாறின்று(கொளு 17.17)

வெண்பா

கரிய பெரும் தடம் கண் வெள்வளைக் கையாளை
மரிய கழி கேண்மை மைந்த - தெரியின்
விளிந்து ஆங்கு ஒழியினும் விட்டுஅகலார் தம்மைத்
தெளிந்தார இல் தீர்வது தீது (341)

பொருள்: கரிய பெரிய கண்களையும் வளையல் அணிந்த அழகிய கைகளையும் கொண்ட தலைவியை, மெய்யுணர்ந்தவன் போலத் தலைவன் கைவிடுதல் அறம் அன்று.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page