மதார்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
சா. முகமது மதார் முகைதீன்(எ) மதார் ,ஏப்ரல் 14, 1993 இல் பிறந்தவர். இவர் தமிழில் கவிதைகள் எழுதி வருகிறார். ஈரோடு மாவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருகிறார்.
பிறப்பு,கல்வி
மதார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிறந்தவர். பெற்றோர் - சாகுல் ஹமீது- மும்தாஜ் சாய்பா.ஆறாம் வகுப்பு வரை அந்தோணியார் துவக்கப்பள்ளியிலும் ,ஏழாம் முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலியில் படித்தார்.இன்பேண்ட் ஜீசஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தூத்துக்குடியில் இளங்கலை இயந்திர பொறியியல் பட்டம் பெற்றவர்.
தனிவாழ்க்கை
திருமணமான ஆண்டு : 2021. மனைவி பெயர் : ஹஸ்மத் ரெஜிபா.குடும்பத்தினருடன் தற்போது ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வசித்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
இவரின் முதல் கவிதை 2005 பிற்பகுதியில் வெளியாகியது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் முன்னோடிகளாக தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி ஆகியோரை குறிப்பிடுகிறார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு'வெயில் பறந்தது ' 2021ல் அழிசி பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியது.
இலக்கிய இடம்
வெயில் பறந்தது தொகுதியின் கவிதைகளில் எதார்த்தக் காட்சி இன்னொன்றாக மாறும் ரசாயனநுட்பம் மதாரின் மொழியில் இயல்பாக படிந்திருக்கிறது. ஒரு முதல் தொகுதி என்கிற வகையில் இத்தொகுதிக்கு இலக்கியப்பரப்பில் உறுதியான ஓர் இடமுண்டு என்று எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
கவிதைகள்
- · வெயில் பறந்தது (2021)
விருதுகள்
· வெயில் பறந்தது (2021)
( இத்தொகுப்புக்காக விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது 2021ல் வழங்கப்பட்டது)
https://www.jeyamohan.in/148168/
உசாத்துணை
https://www.jeyamohan.in/148316/
https://www.jeyamohan.in/147752/