மண்டல புருடர்
மண்டல புருடர் (பதினாறாம் நூற்றாண்டு) சைவப் புலவர். சூடாமணி நிகண்டு நூலை இயற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
மண்டல புருடர் தன்னை "வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்" எனக் கூறிக்கொண்டார். வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவரது சமயம் ஆருகதம். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
மண்டல புருடர் சூடாமணி நிகண்டு நூலை இயற்றினார். பல வடசொற்களைத் தமிழ்ச்சொள்களாக ஆக்கிப் பொருளினைத் தொகுத்துக் கூறியுள்ளார். நிகண்டு நூல்கள் பலவற்றில் இவர் இயற்றிய நிகண்டு விருத்தம் என்னும் யாப்பில் உள்ளது. 'பன்னிரண்டாவது பல்பெயர்க் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி' என்னும் பகுதிக்கு சிறப்புப் பாயிரம் எழுதினார்.
நூல்கள் பட்டியல்
- சூடாமணி நிகண்டு
வெளி இணைப்புகள்
- சூடாமணி நிகண்டு: tamildigital libraray
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.