கபிலதேவ நாயனார்

From Tamil Wiki
Revision as of 18:17, 25 June 2022 by Jeyamohan (talk | contribs)

கபிலதேவ நாயனார் ( பொயு 6 ஆம் நூற்றாண்டு) சைவத் திருமுறைகளில் இடம்பெறும் பாடல்களைப் பாடிய கவிஞர். இவருக்கு கபிலர் என்பது இடுபெயராக பின்னர் அளிக்கப்பட்டிருக்கலாம். கபிலபரணர் என ஒற்றைப் பெயராகவும் சில சுவடிகளில் சுட்டப்படுகிறது. இவர் இவருக்கு முன்பும் பின்னரும் வந்த கபிலர்களில் இருந்து வேறுபட்டவர்.

( பார்க்க கபிலர்கள் )

கபிலதேவர்

கபிலதேவ நாயனார் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள மூத்த நாயனார்களில் ஒருவர். திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருஅந்தாதி ஆகிய மூன்று நூல்களைப் பாடியவர். இவை சைவத் திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் அடங்கியவை.

காலம்

கபிலதேவ நாயனார் பற்றிய செய்திகள் எவையும் கிடைப்பதில்லை. இவர் சைவக்குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வருக்கும் காலத்தால் முந்தியவர் என்று கருதப்படுகிறது. எனவே இவருடைய காலம் பொயு 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் என ஊகிக்கிறார்கள்.

உசாத்துணை

தமிழ் இலக்கிய வரலாறு- மு அருணாசலம்