அன்புநிலையம் அல்லது வாழும் வகை

From Tamil Wiki
Revision as of 11:23, 29 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அன்புநிலையம் அல்லது வாழும் வகை (1941) சுத்தானந்த பாரதியார் எழுதிய நாவல். இது காந்திய விழுமியங்களை பிரச்சாரம் செய்யும் பொருட்டும். அக்காலத்தில் உருவாகி வந்த சைவ மறுமலர்ச்சி, தமிழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அன்புநிலையம் அல்லது வாழும் வகை (1941) சுத்தானந்த பாரதியார் எழுதிய நாவல். இது காந்திய விழுமியங்களை பிரச்சாரம் செய்யும் பொருட்டும். அக்காலத்தில் உருவாகி வந்த சைவ மறுமலர்ச்சி, தமிழியக்கம் ஆகியவற்றின் கருத்துக்களை வலியுறுத்தும்பொருட்டும் எழுதப்பட்ட ஒரு பிரச்சார நாவல்.

எழுத்து, பிரசுரம்

அன்புநிலையம் அல்லது வாழும் வகை திரு.வி.கல்யாணசுந்தரனார் நடத்திவந்த நவசக்தியில் 1939 முதல் தொடராக வெளிவந்து 1941ல் நூலாக வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

பங்காரு சாமி பணச்ச்செருக்கான் ஏழைகளை வதைத்து வாழ்கிறார். சிங்காரம் பொதுச்சேவையில் ஈடுபட்டு ஏழைகளுக்காக பாடுபடுகிறான். அவர்கள் இருவர் நடுவே நடக்கும் மோதல்களில் அன்புச்சாமி என்னும் துறவி தலையிடுகிறார். அவருடைய அறவுரைகளின் விளைவாக பங்காருச்சாமி மனம் மாறுகிறார். இந்நாவலில் காந்தி,நேரு முதலியோரின் கருத்துக்களுடன் மார்க்ஸ், லெனின் கருத்துக்களும் பேசப்படுகின்றன. தேவாரம் திருக்குறள் போன்றவையும் விரிவாக மேற்கோள் காட்டப்படுகின்றன

உசாத்துணை

தமிழ் நாவல் - சிட்டி-சிவபாதசுந்தரம் (கிறிஸ்தவ இலக்கிய சங்கம்)