அறத்தொடு நிற்றல்
From Tamil Wiki
அறத்தொடு நிற்றல்: சங்கப்பாடல்களில் பேசப்படும் துறைகளில் ஒன்று. தலைவியுடன் தலைவன் களவுறவுக்கு முற்படுகையில் தலைவியின் தோழியோ,செவிலியன்னையோ, அன்னையோ அவர்களுக்கு முறையான கற்பொழுக்கத்தை எடுத்துரைத்து மணம்புரிவதற்கு அறிவுரை சொல்லுதல் அறத்தோடு நிற்றல். பலதருணங்களில் கவிதையின் கூறுமுறையில் அந்த அறிவுறுத்தல் உள்ளுறையென மறைந்திருக்கும். களவுறவை குறிப்பாக பிறருக்கு உணர்த்திக்காட்டுதலும் அதன் நோக்கம் மணவுறவுக்கு இட்டுச்செல்லுதல் என்பதனால் அறத்தொடு நிற்றல் என்னும் துறையின்கீழ் அமையும்.
அறத்தொரு நிற்பவர்கள்
தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வரும் அறத்தொடு நிற்பவர்கள்.
அறத்தொடு நிற்கும் முறைகள்
அறத்தொடு நிற்றலுக்கு காரணங்கள்
- ஆற்று ஊறு அஞ்சுதல் (களவுறவுக்கு வழியில் விளையும் துன்பங்களை அஞ்சுதல்)
- அவன் வரைவு மறுத்தல் (தலைவன் தலைவியை சந்திப்பதையும் மணப்பதையும் உறவினர் மறுத்தல்)
- வேற்று வரைவு நேர்தல் (தலைவிக்கு இன்னொரு மணம் பேசப்படுதல்)
- காப்புக் கைம்மிகுதல் (தலைவிக்கு வீட்டில் காவல் மிகுந்துவிடுதல்)