யவனிகா ஸ்ரீராம்
யவனிகா ஸ்ரீராம்[], கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். அரசியல் மற்றும் பாலுமை சார்ந்த கவிதைகள் எழுதுபவர். தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் நவீன கவிதைகள் பற்றி வகுப்பெடுக்கிறார்.
பிறப்பு மற்றும் கல்வி
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பிறந்தார். இயற்பெயர் இளங்கோவன்.
தனி வாழ்க்கை
தனது தந்தையின் குடும்ப வணிகத்தை மேற்கொண்டு தமிழ்நாடு முழுக்க, கிழக்காசிய நாடுகளுக்கும், இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களுக்கும் பல தடவை பயணம் செய்தவர்.
இலக்கிய வாழ்க்கை
தமிழில் இதுவரை ஏழு கவிதைத்தொகுதிகளும் ஒரு கட்டுரைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் கன்னடம், மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவரது கவிதைகள் சமகாலத்தில் பின்காலனித்துவ அரசியல் பார்வைகளைக் கொண்டவை.
விருதுகள்
- பாண்டிச்சேரி மீறல் அமைப்பு வழங்கிய கபிலர் விருது
- விருதாச்சலம் களம்புதிது விருது
* நெய்வேலி லிக்னைட் வழங்கிய சிறந்த படைப்பாளர் விருது
* ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது
படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்
- இரவு என்பது உறங்க அல்ல
* கடவுளின் நிறுவனம்
- சொற்கள் உறங்கும் நூலகம்
- திருடர்களின் சந்தை
- காலத்தில் வராதவன்
- தலைமறைவு காலம்
- அலெக்ஸாண்டரின் காலனி
கட்டுரைத் தொகுப்பு
- சந்தையில் விற்க ஒருபொருளும் இல்லை
இலக்கிய இடம்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.