first review completed

கனகசபைப் புலவர்

From Tamil Wiki

கனகசபைப் புலவர் (1825 - 1873) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். இவர் தொகுத்த தமிழ்நிகண்டு முக்கியமான பணி. பெரும்பாலான நூல்கள் கிடைக்கவில்லை.

பிறப்பு, கல்வி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அளவெட்டியில் 1825-ல் வேலுப்பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். வட்டுக்கோட்டை சாஸ்திரக் கலாசாலை கல்விச்சாலையில் பயின்றார். ஆங்கில வைத்தியமும் ஆயுர்வேத வைத்தியமும் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

இளமையிலிருந்து விரைந்து கவி பாடும் புலமை பெற்றிருந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்தார். தனிப்பாடல்கள் பல இயற்றினார்.

அழகர்சாமி மடல் எனும் சிறு பாட்டுநூலை (பிரபந்தம்) எழுதினார். வேலூர் சென்று பாட்டுடைத் தலைவர் முன்னிலையில் இந்நூலை அரங்கேற்றினார். 1753-ல் விருத்தப்பாக்களைக் கொண்ட திருவாக்குப் புராணத்தைப் பாடினார். சென்னைக்குச் சென்று வீராசாமி செட்டியார் என்ற புலவருடன் தமிழ் அகரவரிசையைத் தயாரிக்க உதவினார். தமிழ்நிகண்டு எழுதினார். இந்த நூல்கள் எவையும் கிடைக்கவில்லை. திருவாக்குப் புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை எழுதினார். இந்நூல் 1853-ஆம் ஆண்டு சென்னையில் பதிப்பித்தார்.

மறைவு

கனகசபைப் புலவர் 1873-ல் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

புராணம்
  • திருவாக்குப் புராணம்
மடல்
  • அழகர்சாமி மடல்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.