சாது ரத்தின சற்குரு
சாது ரத்தின சற்குரு (பொ.யு. 1841 - 1908) தமிழ்ப்புலவர், வேதாந்தி, பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். துவைத சைவ கண்டனம் என வழங்கப்படும் இருபத்தி நான்கு சித்தாந்த கண்டன நூல்கள் முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
சென்னையில் சிவசங்கர ரெட்டியாருக்கும் முனியம்மையாருக்கும் பொ.யு. 1841இல் சாது ரத்தின சற்குரு மகனாகப் பிறந்தார். வைசியர் குலம். பள்ளிக் கல்வி கற்றார். நன்னூல், அறிவு நூல்களைக் கற்றார். திருமணம் செய்து கொண்டார். வணிகத் தொழில் செய்தார்.
ஆன்மீக வாழ்க்கை
துறவில் நாட்டம் கொண்டார். திருவொற்றியூர் கிருஷ்ணானந்த அடிகளிடம் சீடராகச் சேர்ந்தார். அறிவு நூல் ஆராய்ச்சி, சமாதி நெறி ஆகியவற்றைக் கற்றார். ஈசூர் சச்சிதானந்த் அடிகளிடம் வேதாந்த நூலைக் கற்றார். கோடக நல்லூர் சுந்தர அடிகளிடமும் சில காலம் வேதாந்தம் கற்றார்.
இலக்கிய வாழ்க்கை
ரிப்பன் அச்சுக் கூடம் நடத்தினார். இவருக்குப் பின் இவரின் மகன் சிவசங்கரச் செட்டியாரால் நடத்தப்பட்டது. தற்போது இந்த அச்சுக்கூடம் புதுக்கோட்டையில் உள்ளது. தமிழ் நூல்கள் அதிகம் பரவாமல் இருந்த கால்கட்டத்தில் இந்த அச்சுக்கூடம் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது. இருபத்தி நான்கு சித்தாந்த கண்டன நூல்கள் எழுதினார். இவை ஒட்டுமொத்தமாக துவைத சைவ கண்டனம் எனப்படுகிறது.
மறைவு
சாது ரத்தின சற்குரு ஜனவரி 8, 1908இல் காலமானார்.
நூல் பட்டியல்
கண்டன நூல்கள்
- தத்துவவாதம்
- சங்கராச்சாரொயார் அவதார் மகிமை
- வேதாந்த சங்கை நிவாரணம்
- அத்வைத தூடண பரிகாரம்
- பதிபசுபாசவாதம்
- துலிதசைவரே மாயாவாதிகள்
- மாயாவாத சண்டமாருதம்
- திருவள்ளூர் முதற் குறள்
- பசு சச்சிதானந்தம் உடையதா
- அவைதிக சைவ சண்ட மாருதம்
- முடிவுரைச் சூறாவளி
- பஞ்சதசப் பிரகரணாபாச விளக்கச் சண்டமாருதம்
- துலிதாத்துவித வாதம்
- துலிதசைவ மறுப்பு
- பேதவாத திரஸ்காரம்
- திருமந்திர விசாரணை
- ஜீவான்மாவின் பரிணாமம்
- வேதாந்த தீபிகை
- முதற்குறள்வாத சத்தூடணி
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
✅Finalised Page