வைத்தியநாதச் செட்டியார்
From Tamil Wiki
Revision as of 01:02, 5 September 2023 by Tamizhkalai (talk | contribs)
வைத்தியநாதச் செட்டியார் (1753-1844) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
வைத்தியநாதச் செட்டியார் இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அரிகரபுத்திரச் செட்டியாரின் மகனாக 1753-ல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். நெல்லியவோடைத் தேவி மீது பக்தி கொண்டவர். நெல்லியவோடை அம்மன் கோயிலின் பூசகராய் இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
வைத்தியநாதச் செட்டியார் கவிதைகள் எழுதினார். நெல்லியோடைத் தேவிமீது தனிப் பாக்கள் பல இயற்றினார். 'நெல்லியவோடை அம்பாள் பிள்ளைக்கவி' என்ற பிரபந்தத்தை இயற்றினார்.
மறைவு
வைத்தியநாதச் செட்டியார் 1844-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- நெல்லியவோடை அம்பாள் பிள்ளைக்கவி
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:வைத்தியநாதச் செட்டியார், அரிகரபுத்திரச் செட்டியார்: noolaham
✅Finalised Page