ஜெயாக்யம்

From Tamil Wiki

ஜெயாக்யம் : ஜெயாக்ய சம்ஹிதை. வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல். சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் நூல்களும் அடிப்படையானவை என்பதனால் மும்மணிகள் எனப்படுகின்றன.

ஆகமம்

ஆகமம் என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரு வகை. இவற்றில் பாஞ்சராத்ர ஆகமங்களில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகியவை மும்மணிகள் எனப்படுகின்றன.

காலம்

ஜெயாக்ய சம்ஹிதை பொயு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கப்படுகிறது.

உள்ளடக்கம்

ஜெயாக்ய சம்ஹிதை வைணவ வழிபாட்டு மரபுகளை வகுத்துரைக்கிறது.

உசாத்துணை