being created

எம். பக்தவத்சலம்

From Tamil Wiki
Revision as of 17:31, 14 May 2024 by Ramya (talk | contribs)
எம். பக்தவத்சலம்

எம் பக்தவத்சலம் (அக்டோபர் 9, 1897 – பிப்ரவரி 13, 1987) விடுதலைப் போராட்ட வீரர். விடுதலைக்கு முன்னும் பின்னும் காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர்.

வாழ்க்கைக் குறிப்பு

எம் பக்தவத்சலம் சென்னையில் சி.என்.கனகசபாபதி முதலியார்(மீஞ்சூர்), மல்லிகா (பூந்தமல்லி நாசரேத்பேட்டை) இணையருக்கு அக்டோபர் 9, 1897-ல் பிறந்தார். தன் ஐந்து வயதில் தந்தையை இழந்தார். அவரது மாமாக்கள் சி.என். முத்துரங்க முதலியார் மற்றும் சி.என். எவலப்ப முதலியார் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார்.

அரசியல் வாழ்க்கை

சுதந்திரத்திற்குப் முன்

பக்தவத்சலம் பட்டப்படிப்புக் காலத்திலேயே இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.

பொறுப்புகள்
  • 1926-ல் அவர் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரானார்.
  • இந்தியா நாளிதலை தொடங்கி 1933 வரை நிர்வகித்தார்.
  • 1926 மற்றும் 1935 ஆம் ஆண்டு மாவட்ட வாரியம் மற்றும் நகராட்சித் தேர்தல்களின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பேரவை செயலாளராக இருந்தார்.
  • சில காலம் சென்னை மகாஜன சபையின் செயலாளராகவும் பணியாற்றினார்.
  • 1944-ல் இந்திய அரசியலமைப்புச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடுதலைப் போராட்டம்

வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தின் போது பக்தவத்சலம் காயமடைந்தார். 1932ல் இந்தியாவின் சுதந்திர தின விழாவை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். 1944-ல் விடுதலை செய்யப்பட்டார்.

அரசியல்
  • 1936 மாநகராட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு துணை மேயராக பணியாற்றினார்.
  • 1937-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நின்று திருவள்ளூர் ஊரகத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ராஜாஜி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சக நாடாளுமன்றச் செயலாளராக பக்தவத்சலம் பணியாற்றினார்.
  • இரண்டாவது உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் போர் பிரகடனப்படுத்தப்பட்டதன் பேரில் பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸின் மற்ற அலுவலக உறுப்பினர்களுடன் ராஜினாமா செய்தார்.
  • 1946-ல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நின்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

சுதந்திரத்திற்குப் பின்

அரசியல்
  • 1952 முதல் 1954 வரை ராஜாஜி அமைச்சரவையிலும், 1954 முதல் 1963 வரை காமராஜர் அமைச்சரவையிலும் மூத்த அமைச்சராக பணியாற்றினார்.
முதலமைச்சர்
  • 1962-ல் இந்திய தேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது. காந்தி ஜெயந்தி நாளில் அக்டோபர் 2, 1963 அன்று, காமராஜர் திட்டத்தின் (கே பிளான்) கீழ் காங்கிரஸ் கட்சியின் அலுவலகப் பொறுப்பாளராக அதிக நேரத்தை செலவிடுவதற்காக காமராஜர் ராஜினாமா செய்த பிறகு பக்தவத்சலம் சென்னையின் முதலமைச்சராக பதவியேற்றார். பக்தவத்சலம் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் கடைசி முதலமைச்சர்.

ஆகஸ்ட் 1963-ல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். கோல்வால்கர், சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டுக் குழுவையும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவுக் குழுவையும் அமைத்து அதன் செயலாளராக ஏக்நாத் ரானடேவை நியமித்தார். கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதே இக்குழுவின் முக்கிய பணியாக இருந்தது. இதற்கு முதல்வர் பக்தவத்ஸலம் மற்றும் மத்திய கலாச்சார விவகார அமைச்சர் ஹுமாயுன் கபீர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஒரு நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக 323 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை ரானடே அவரிடம் அளித்தபோது பக்தவத்சலம் ஒப்புக்கொண்டார்.

பக்தவத்சலம் இந்தியை, தமிழ் நாட்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் முடிவை ஆதரித்தார். மார்ச் 7, 1964 அன்று, சென்னை சட்டமன்றத்தின் கூட்டத்தில் பக்தவத்சலம் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளை கற்பிக்க பரிந்துரைத்தார். ஜனவரி 26, 1965 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால இடைமாற்றக் காலம் முடிவுக்கு வந்தபோது, போராட்டங்கள் தீவிரமடைந்து காவல்துறை நடவடிக்கை மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. பிப்ரவரி 3 , 1965 அன்று, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள் சேதத்திற்கு மற்றும் வன்முறைகள் பெருமளவில் நடந்ததற்கு எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் இடதுசாரிக் கட்சிகளும் தான் காரணம் என்று பக்தவத்சலம் கூறினார். 1967 தேர்தலில் தோல்வியடைந்தார்.

சீர்திருத்தங்கள்

இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்.

1960ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர்.

நினைவிடம்

தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்து, எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மறைவு

எம். பக்தவத்ஸலம் தன் 89 வயதில் ஜனவரி 31, 1987-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • குடியரசும் மக்களும்
  • சமுதாய வளர்ச்சி
  • வளரும் தமிழகம்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.