under review

மறைந்துபோன தமிழ் நூல்கள்

From Tamil Wiki
Revision as of 14:48, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
மறைந்துபோன தமிழ் நூல்கள்

மறைந்துபோன தமிழ் நூல்கள் (1959) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல். தமிழிலக்கியத்தில் இருந்து அழிந்துபோய், பெயர் மற்றும் சில மேற்கோள்கள் மட்டும் எஞ்சும் நூல்களை பற்றிய ஆய்வு இது

எழுத்து, வெளியீடு

மயிலை சீனி. வேங்கடசாமி 1952 முதல் 1953 வரையிலான ஆண்டுகளில் செந்தமிழ்ச்செல்வி இதழில் ‘மறைவுற்ற தமிழ் நூல்கள்’ என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இதை 1959 ல் பாரிநிலையம் வெளியிட்டது. இந்நூலுக்கு மு. வரதராசன் முன்னுரை எழுதினார்.

உள்ளடக்கம்

வெவ்வேறு நூல்களில் பெயர் குறிப்பிடப்பட்டு, அல்லது ஓரிரு மேற்கோள் செய்யுள்கள் தரப்பட்டு, பிரதி கிடைக்காமல் அழிந்துபட்ட நூல்களைப் பற்றிய தரவுகளை இந்நூலில் மயிலை சீனி வேங்கடசாமி தொகுத்தளிக்கிறார். அகத்துறை, புறத்துறை, இலக்கணநூல்கள், சிற்றிலக்கியங்கள் என்று பகுத்து அவற்றை முன்வைக்கிறார்

இலக்கிய இடம்

தமிழிலக்கியத்தில் இருந்து மறைந்துபோன நூல்களை பற்றிய முதல் ஆவணப்பதிவு இது. தமிழிலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்த உதவும் ஆய்வு.

உசாத்துணை


✅Finalised Page