இலங்கையர்கோன்

From Tamil Wiki
இலங்கையர்கோன்

இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்) (6 செப்டெம்பர் 1915 - 14 அக்டோபர் 1961) இலங்கைத் தமிழிலக்கிய மரபின் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர். விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் செயல்பட்டவர்

பிறப்பு, கல்வி

இலங்கையர்கோன் என்ற பெயரில் எழுதிய த. சிவஞானசுந்தரம் யாழ்ப்பாணம் ஏழாலையில் 6 செப்டெம்பர் 1915ல் பிறந்தார். இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்க்

தனிவாழ்க்கை

இலங்கையர்கோன் சிறிதுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். திரிகோணமலையில் நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICEER) பணிபுரிந்தார்.

இலக்கியவாழ்க்கை

இலங்கையர்கோன் தன் பதினெட்டாவது வயதிலேயே எழுதத்தொடங்கினார். முதலில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நவீனச் சிறுகதைகளை மொழியாக்கம் செய்தார். அது சிறுகதை வடிவம் பற்றிய பயிற்சியை இவருக்கு அளித்தது. இலங்கையர்கோன் எழுதிய முதல் கதை மரியா மக்தலேனா 1930ல் தமிழகத்தில் இருந்து வெளிவந்த கலைமகள் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து ஈழகேசரி போன்ற இதழ்களில் எழுதினார். வெள்ளிப்பாதரசம் ,மனிதக்குரங்கு, சக்கரவாகம், மச்சாள் நாடோடி, வஞ்சம், கடற்கரைக் கிளிஞ்சல்கள் போன்ற கதைகள் ஈழச்சிறுகதை மரபில் முன்னோடியான முயற்சிகளாக அமைந்தன.

இலங்கையர்கோன் தன் எழுத்துப்பணியின் பிற்பகுதியில் நாடகங்கள் எழுதுவதில் ஈடுபட்டார். அவர் எழுதிய பச்சோந்தி, லண்டன் கந்தையா முதலிய நாடகங்கள் மேடையேறி வரவேற்பு பெற்றன

நூல்கள்

இலங்கையர்கோன் நூல்கள் இணையநூலகச் சேமிப்பில் உள்ளன

நாடகங்கள்
  • பச்சோந்தி
  • லண்டன் கந்தையா
  • விதானையர் வீட்டில்
  • மிஸ்டர் குகநாதன்


உசாத்துணை

இலங்கையர்கோன் நூல்கள் இணையநூலகத் தொகுப்பு

http://tamilonline.com/thendral/article.aspx?aid=5090