இலங்கையர்கோன்
From Tamil Wiki
இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்) (6 செப்டெம்பர் 1915 - 14 அக்டோபர் 1961) இலங்கைத் தமிழிலக்கிய மரபின் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர். விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் செயல்பட்டவர்
பிறப்பு, கல்வி
இலங்கையர்கோன் என்ற பெயரில் எழுதிய த. சிவஞானசுந்தரம் யாழ்ப்பாணம் ஏழாலையில் 6 செப்டெம்பர் 1915ல்
யுஇயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழத்து சிறுகதைத்துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சட்டக்கல்லூரியில் பயின்று, வழக்கறிஞராகவும், திருகோணமலையில் நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICEER) பணிபுரிந்தார். சமஸ்கிருதம், இலத்தீன், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் ஆழ்ந்த பயிற்சி பெற்றார்.
நூல்கள்
இலங்கையர்கோன் நூல்கள் இணையநூலகச் சேமிப்பில் உள்ளன