வேணு. குணசேகரன்
வேணு. குணசேகரன் (1953) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திரைக்கதை-வசன ஆசிரியர், பாடலாசிரியர். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும் வரலாற்று நாவல்களையும் எழுதினார். இந்தியன் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினார். அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
வேணு. குணசேகரன், 1953-ம் ஆண்டு, சென்னையில், ப. வேணுகோபால் – சகுந்தலாம்மாள் இணையருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். பெரம்பூர் ஜமாலியா பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை வைணவக் கல்லூரியில் பயின்று பி.காம். பட்டம் பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் எம்.காம். முதுகலைப் பட்டம் பெற்றார். வங்கியியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாகப் பயின்று சி.ஏ.ஐ.ஐ.பி. (CAIIB-Certified Associate of Indian Institute of Bankers) பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
வேணு. குணசேகரன், இந்தியன் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: அரங்க நாயகி. மகள்கள்: பூர்ணிமா, சித்ரலேகா, அருண்பிரபா.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.