ஜாவர் சீதாராமன்
ஜாவர் சீதாராமன் (ஜாவர் என். சீதாராமன்; நடேச ஐயர் சீதாராமன்) (ஜூலை 6, 1920 – அக்டோபர் 29, 1969) எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், நாடக, திரைப்பட இயக்குநர். பொது வாசிப்புக்குரிய நாவல்களை எழுதினார். அமானுஷ்யம் மற்றும் மர்மம் கலந்து ஜாவர் சீதாராமன் எழுதிய ‘உடல் பொருள் ஆனந்தி’ தொடர் குறிப்பிடத் தகுந்த ஒன்று.
பிறப்பு, கல்வி
நடேச ஐயர் சீதாராமன் என்னும் ஜாவர் என் சீதாராமன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அழகிய மணவாளம் கிராமத்தில், ஜூலை 6, 1920 அன்று, வழக்குரைஞர் நடேச ஐயரின் மகனாகப் பிறந்தார். கோயம்புத்தூரில் உள்ள சர்வ ஜன ஹைஸ்கூலில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். திருச்சி தேசியக் கல்லூரியில் இண்டர்மீடியட் கற்றார். புனித ஜோசப் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் படித்தார். சட்டக்கல்லூரியில் படித்து பி.எல். பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
ஜாவர் சீதாராமன் தேசியக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் எழுத்துத் துறையிலும், திரைப்படத்துறையிலும் பணிபுரிந்தார். ஜாவர் சீதாராமனின் மண வாழ்க்கை குறித்த விவரங்களை அறிய இயலவில்லை.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.