நரன்
From Tamil Wiki
Revision as of 14:45, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
நரன் (பிறப்பு: 1981) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். பதிப்பாளர், இதழாசிரியர்.
பிறப்பு, கல்வி
நரன் விருதுநகரில் பிறந்தார். வணிகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஊடகத்துறையில் பணியாற்றுகிறார்.
அமைப்புச் செயல்பாடுகள்
நரன் சால்ட் பதிப்பகத்தின் நிறூவனர். `361 டிகிரி' இதழின் ஆசிரியராக
இலக்கிய வாழ்க்கை
2002 முதல் சிற்றிதழ்களில் எழுதி வருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும், இரு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. நரனின் முதல் கவிதைத் தொகுப்பு “உப்பு நீர் முதலை” என்ற 2010-ல் காலச்சுவடு பதிப்பாக வெளியானது. விகடனில் ’வேட்டை நாய்கள்’ என்ற தொடரை எழுதிவருகிறார்.
விருதுகள்
- சிறந்த சிறுகதைஅக்ளுக்கான விகடன் விருது
- வாசகசாலை விருது, சுஜாதா விருது
- எழுத்தாளர் க.சி.சிவக்குமார் நினைவு விருது
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- உப்பு நீர் முதலை
- ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்
- லாகிரி
- மிளகு பருத்தி மற்றும் யானைகள்
சிறுகதைகள்
- கேசம்
- சரீரம்
- பராரி (ஏழு கடல், ஏழு மலை)
இணைப்புகள்
- ‘I believe in being the fringe. It helps keep my poetry alive’: How Naran is redefining Tamil poetry: Kavitha Muralidharan
- தூக்கம் பறித்த ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்: யோகி: வல்லினம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.