under review

சிவபுரம்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 06:27, 11 October 2023 by Tamizhkalai (talk | contribs)

சிவபுரம்பிள்ளை (பொ.யு. 16-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், சைவப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவபுரம்பிள்ளை சோழநாட்டில் காவேரிக்குத் தென்கரையிலுள்ள திருவாவடுதுறையில் இருந்த அம்பலவாண தேசிகரின் சீடர். அவரிடம் தீட்சை பெற்று உபதேசங்கள் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சிவபுரம்பிள்ளை தன் ஆசிரியர் அம்பலவாணதேசிகர் மீது பத்து வெண்பாக்கள் பாடினர்.

பாடல் நடை

அந்தமலத் தத்துவித மானபணி யாலகற்றி
வந்தமலத் தத்துவிதம் வைத்தாயே-யெந்தாய்
திருவாவடுதுறைவாழ் தேசிகா பொய்யின்
மருவாத வம்பலவான.

உசாத்துணை


✅Finalised Page