கௌதமி கோபிதாஸ்
கௌதமி கோபிதாஸ் (பிறப்பு: செப்டம்பர் 7, 1991) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
கௌதமி கோபிதாஸ் இலங்கை யாழ்ப்பாணம் தையிட்டியில் இராஜசூரியர், பராசக்தி இணையருக்கு செப்டம்பர் 7, 1991-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் பயின்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டம் பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
கௌதமி கோபிதாஸ் பன்னிரெண்டு வயதில் முதல் கவிதையை எழுதினார். கவிதை, கட்டுரை, சிறுவர் கவிதை, சிறுவர் பாடல்கள் எழுதினார். இவரின் படைப்புகள் அனுராதபுரம் தமிழ் மகாவித்தியாலயத்தின் விவேகானந்தா இதழிலும் மகாஜனா கல்லூரியின் மகாஜனா இதழிலும் வெளிவந்தன.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.