இரா. சர்மிளாதேவி
இரா. சர்மிளாதேவி
வாழ்க்கைக் குறிப்பு
கண்டி கலஹாவில் பிறந்த எழுத்தாளர். கலஹா ஸ்ரீஇராமகிருஷ்ணன் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்த்துறையில் இரு வருடங்கள் தற்காலிக விரிவுரையாளராகவும் கடமையாற்றிய இவர் தற்பொழுது கண்டி திரித்துவக் கல்லூரியில் ஆசிரியையாகக் பணியாற்றுகின்றார். கட்டுரை, கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம், விவாதம், மேடைப்பேச்சு என பன்முக திறமைகளைக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கதிர், திரித்துவக்கல்லூரியின் இந்து மாணவர் மன்ற வெளியீடான சக்தி சஞ்சிகை ஆகியவற்றுக்கு இதழாசிரியராகவும் இருந்துள்ளார். அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலரிலும் இவரது கட்டுரை வெளிவந்துள்ளது. நாளிதழ்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றிலும் இவர் எழுதிவருகிறார். முதுத்தத்துவமாணிக் கற்கை நெறியை மேற்கொண்டு மலையகத் தமிழ் நாவல்களில் சமுதாயப் பிரச்சினைகள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மலையகத் தமிழ் சஞ்சிகைகள் எனும் இவரது ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது.
தனிவாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை
விருதுகள்
நூல் பட்டியல்
- மலையகத் தமழ்ச் சஞ்சிகைகள் ஓர் ஆய்வு
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.