first review completed

மண்பானை (சிறுகதை)

From Tamil Wiki
Revision as of 14:48, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
மண்பானை (சிறுகதை)

மண்பானை (சிறுகதை) வி. பாலாம்பாள் எழுதிய சிறுகதை.

எழுத்து, வெளியீடு

1934-ல் மனோகரி இதழில் மண்பானை சிறுகதை வெளியானது. சகோதரி வி.பாலாம்பாள் எழுதியது.

கதைச்சுருக்கம்

பொன்னம்மாள் தன் மகன் தண்டபாணி மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றிய கதை. தன் மகனின் உத்யோகம், கல்விச் சிறப்பு, அவன் மனைவி கொணர்ந்த சீர்வரிசை என அவன் குறித்த அனைத்திலும் பெருமையைக் கொண்டவளாக இருக்கிறாள். அவள் பெருமையடித்துக் கொள்ளலும், தன் பாசத்தைக் காண்பிக்க அவள் தன் கணவனுடன் அவனுக்கு எடுத்துச் செல்லும் பொருட்களைப் பற்றிய விவரணையாக கதை நகர்கிறது. அதில் வழியில் தவறவிட்டு உடைத்த மாவடு போட்ட மண்பானை பற்றிய வருத்தத்தோடு கதை முடிகிறது.

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.