under review

சேந்தனார்

From Tamil Wiki

சேந்தனார் தமிழ்ப்புலவர். திவாகர நிகண்டு நூலைச் செய்யக்காரணமாக அமைந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சேந்தனார் தஞ்சாவூரைச் சேர்ந்த அரிசில் ஆற்றங்கரையிலுள்ள அம்பர் என்ற ஊரில் பிறந்த பிராமணர். தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். உபயகவி என்று அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலை திவாகரர் எழுத ஊக்குவித்தார். இதில் இரண்டாயிரத்து இருநூற்று எண்பத்தி ஆறு சூத்திரங்கள் உள்ளன. திவாகரர் இவரின் மாணவராக இருக்கலாம் என அறிஞர்கள் கருதினர். "செங்கதிர் வரத்திற் ருேன்றுந் திவாகரர்" என்று மண்டலபுருடர் சூடாமணி நிகண்டில் பாடியிருப்பதால் திவாகரர் என்பவர் இருந்தார் என அறிஞர்கள் நம்பினர்.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.