சுழிகுளம்
சுழிகுளம் சித்திர கவிகளில் ஒரு வகை. குளத்தில் எறியப்படும் கல் சுழிசுழியாய் அலைகளைத் தோற்றுவிப்பதைப் போலச் சுழி அமைப்பில் வரையப்படும் சித்திரம் ஒன்றில் உரிய முறையில் எழுத்துகளைப் பொருத்தி இயற்றப்பெறும் செய்யுள் என்று மாறனலங்காரம் சுழிகுளத்துக்கான இலக்கணத்தைக் கூறுகிறது.
தெழித்துஎழு நீர்குளத் தினுள்செறித் ததைக்கொடு
சுழித்துஅடங் குவபோன்று அடங்குதல் சுழிகுளம் (மாறனலங்காரம், 295)
எட்டுட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கத் தக்க வகையில் பாடப்படுவது என சாமிநாதம் கூறுகிறது
ஓர்பாட்டு எவ்வெட்டுஎழுத் தாய் நால்வரி இட்டு
ஒழுங்குகி ழ்மேல் மேல்கிழ்புறம் புறம்பார்க்கி னும்
பாட்டு ஒத்தல் சுழி குளம் (சுவாமிநாதம், 197)
எடுத்துக்காட்டுகள்
எடுத்துக்காட்டு-1
மதிமதி மாமா வாவா
திதிதிதி சேயே யோவா
மதியமு மாசே யேமா
திதிமுரு காமா சேமா (பாம்பன் சுவாமிகள், சித்திரகவிகள், ப. 30)
வாசிக்கும் முறை: இடதுபுற முனையில் முதலெழுத்தைத் தொடங்கி, கீழிறங்கி, சுழியின்வழியே வலப்புறம் சென்று மேலேறி, இவ்வாறே சுழிவழியாக ஏனைய எழுத்துகளையும் படிக்கச் செய்யுள் நிறைவடையும்.
மதிமதி - அறிவுக்கறிவே ,அழகுக்கழகே . வாவா-வருவாய் திதி திதி - ( என்னை ) நிலை நிறுத்துவாயாக சேயே-இளமைப் பருவமுடையானே , ஓயா - கெடாத மதி அம் உமா - அறிவு மழகுமுடைய உமாதேவியின் சேயே - மகனே . மா திதி முருகா - பெரிய காப்புத் தொழிலுடைய முருக னென்னுந் திருநாமத்தோனே மா சேமா - மகாசேமமுடையானே .
எடுத்துக்காட்டு-2
“கவிமுதி யார்பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா”
கவி முதியார் பாவே – செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே விலை அருமை மா நன்மை பா – விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும் முயல்வது உறுநர் – முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம் திரு அழிந்து மாயா – செல்வம் சிதைந்து தொலையாது
உசாத்துணை
சித்திரகவியின் வகைகள், தமிழ் இணைய கல்விக்கழகம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.