நவசக்தி
From Tamil Wiki
நவசக்தி (1920) திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தொடங்கி நடத்திய மாத இதழ். அரசியல், தமிழாய்வு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்தது
வெளியீடு
தேசபக்தன்’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் 22.10.1920ஆம் நாள் நவசக்தி என்ற இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார்.சிலம்பு 13 பரல் 11 என்பதைத் தமிழ் எண்களால் குறித்தது
உள்ளடக்கம்
நவசக்தி பெரும்பாலும் திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரின் கருத்துக்களையும் நூல்குறிப்புகளையும் தாங்கி வெளிவந்தது. தேசிய விடுதலைப்போராட்டம், காந்தியக் கருத்துக்களை வெளியிட்டது. கல்கி கிருஷ்ணமூர்த்தி இவ்விதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்/