சந்திரசேகர முதலியார்
சந்திரசேகர முதலியார் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சந்திரசேகர முதலியார் உடுப்பிட்டிக் கோயிற்பற்றில் வல்லிபட்டிக் குறிச்சியில் வேளாளர் மரபில் பிறந்தார். வள்ளியம்மையை மணந்தார். இவரின் மகன்கள் முத்துக்குமார முதலியார், குமாரசாமிப்புலவர். சந்திரசேகர முதலியார் வியாபாரம் செய்து வாழ்ந்தார். போர்ச்சுகீசியர் காலத்தில் வன்னியில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கியவர் சந்திரசேகர முதலியார் என்பர்.
இலக்கிய வாழ்க்கை
சந்திரசேகர முதலியார் தன் வியாபாரத்தில் அடைந்த அனுபவங்களை நொண்டி நாடகம் பாடினார்.
மறைவு
சந்திரசேகர முதலியார் தன் தொண்ணூற்றியாறாவது வயதில் காலமானார்.
நூல் பட்டியல்
- நொண்டிப் பாடல்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.