அஞ்சலை
அஞ்சலை கண்மணி குணசேகரன் எழுதிய நாவல். கனடா இலக்கியத் தோட்டத்தின் விருது பெற்றது.
ஆசிரியர்
பதிப்பு
கதை மாந்தர்
பாக்கியம்-
கதைச்சுருக்கம்
படாச்சிகள் கார்குடலில், தாழ்த்தப்பட்ட வகுப்பில் கணவனை இழந்த பாக்கியத்திற்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மூன்றாவது பெண் அஞ்சலை மிகத்துணிச்சலான, வலுவுள்ள இளம்பெண். அஞ்சலைக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது முதல் அக்காவின் கணவன் அவளை இளைய தாரமாகக் கேட்கிறான். நடக்காமல் போகவே, ஆள் மாறாட்டம் செய்து அண்ணனை மாப்பிள்ளை என்று காட்டி நோஞ்சானான மண்ணாங்கட்டிக்கு மணம் செய்து வைக்கிறான். உண்மை அறிந்து, மண்ணாங்கட்டி அவள்மேல் அன்புடன் இருந்தும் வெறுப்பு தீராமல் கொதிக்கும் அஞ்சலை வீட்டை விட்டு தாய்வீடு செல்கிறாள். வழியில் பார்த்த இரண்டாவது அக்கா தன் வீட்டிற்குக் கூட்டி சென்று, தன் கொழுந்தனுக்குக் கட்டி வைக்கிறாள். வெண்ணிலா பிறக்கிறாள். தன் அக்காவுக்கும் கொழுந்தனுக்கும் தகாத உறவு இருப்பதை அறிந்து, மீண்டும் குழந்தையுடம் மண்ணாங்கட்டியிடம் போகிறாள். இரு குழந்தைகள் பிறக்கின்றன. நிலா தன் பாட்டியின் வீட்டில் மாமன் ஆதரவில் வளர்கிறாள். தம்பி அவளை மணம் செய்துகொள்வான் என்று அஞ்சலை நம்பியிருந்தபோது அவனுக்கு கல்யாணி தன் மகளைப் பேசி முடிக்கிறாள். தம்பியிடம் கெஞ்சி, அது பலனளிக்காத்தால் அஞ்சலை சாகப் போக, வெண்ணிலா 'இந்த மனிதர்களிடையே வாழ்ந்து பார்க்க வேண்டும்' என்று அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறாள்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.