எம்.எஸ்.எம். அக்றம்
From Tamil Wiki
எம்.எஸ்.எம். அக்றம் (பிறப்பு: நவம்பர் 17, 1948) ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர், ஊடகவியலாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
எம்.எஸ்.எம். அக்றம் இலங்கை களுத்துறையில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அக்றம் சம்சுதீன், துறையூரான் ஆகிய புனைபெயர்களில் கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் எழுதியுள்ளார். தினபதி, சிந்தாமணி, தந்தி, சுந்தரி பத்திரிகையின் நிருபராகவும் வீரகேசரிச் செய்தியாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.