ராண்டார்கை
மாடபூசி ரங்கதுரை (ராண்டார்கை) (நவம்பர் 8, 1937 - 24 ஏப்ரல் 2023) எழுத்தாளர், திரைக்கதை-வசன ஆசிரியர், திரைப்பாடல் ஆசிரியர். வழக்குரைஞராகப் பணியாற்றினார். திரைப்பட விமர்சகராகச் செயல்பட்டார். பழங்காலத் திரைப்படக் கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களது வாழ்க்கையை தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்திற்காக ஆவணப்படுத்தினார். ஆவணப்படங்கள் சிலவற்றை இயக்கினார். விளம்பரப் படங்களை சிலவற்றைத் தயாரித்தார்.
பிறப்பு, கல்வி
மாடபூசி ரங்கதுரை என்னும் இயற்பெயர் கொண்ட ராண்டார்கை, நவம்பர் 8, 1937-ல், ஆந்திராவில் பிறந்தார். நெல்லூரில் உயர்நிலைக் கல்வி பயின்ற இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியலில் (BSc) பட்டம் பெற்றார். சட்டக் கல்வி பயின்று வழக்குரைஞர் ஆனார்.
தனி வாழ்க்கை
ராண்டார்கை வழக்குரைஞராகப் பணியாற்றினார். பின் தனியார் நிறுவனம் ஒன்றில் ஐந்தாண்டுகள் பணியாற்றினார். பின் அதிலிருந்து விலகி திரைப்படத் துறையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பின் முழு நேரச் சுதந்திர எழுத்தாளராக வாழ்ந்தார். மனைவி டோலரஸ். மகள்: பிரியா.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.