சதுரகராதி
சதுரகராதி வீரமாமுனிவரால் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட முதல் தமிழ் அகராதி. 18-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு 1824-ல் முழுமையாய் அச்சில் வந்தது. இதன் அகராதிக்குக் பத்துப் பதிப்புகளுக்கு மேல் - வந்துள்ளன . பின்னாட்களில் தொகுக்கப்பட்ட தமிழ் - தமிழ் அகரமுதலிகளுக்கு எல்லாம் மூலநூலாய் விளங்குவது சதுரகராதி.
ஆசிரியர்
சதுரகராதியைத் தொகுத்தவர் வீரமாமுனிவர்.
நூல் அமைப்பு
சதுரகராதி -நான்கு வகையான அகராதிகள் அடங்கிய தொகுதி .
பெயரகராதி . இதில் ஒரு சொல்லுக்குரிய பல பொருள்களும் தரப்பட்டுள்ளன
பொருளகராதி . இதில் தெய்வப் பெயர் , மக்கட்பெயர் முதலிய பொருட்பெயர்களை அகரநிரலில் வைத்து அவ்வப் பொருட்கு உரிய பல பெயர்களும் அகரநிரலில் சுட்டப்பட்டுள்ளன
தொகையகராதியில் இருசுடர் , முக்குணம் என்றாற் போல எண்தொகையாய் வரும் பொருள்களுக்குரிய விளக்கங்கள் அகரநிரலில் அமையக் காணலாம் .
தொடையகராதியில் செய்யுள்களில் வரும் எதுகைத் தொடர்களை அகரநிரலில் தருகின்றார் . இதில் குறிற்கீழெதுகை , நெடிற்கீழெதுகை என இருபகுதி உண்டு . இவற்றில் படித்தல் , பிடித்தல் , பொடித்தல் , வடித்தல் , முடித்தல் என்றாற்போலவும் ஊராண்மை , ஏராண்மை , பேராண்மை என்றாற்போலவும் சொற்களை அமைத்துப் பொருளும் சுட்டியுள்ளார் . இப் பகுதி சூடாமணி நிகண்டில் ககர எதுகை முதல் னகர எதுகை வரையிலும் சொற்களை எதுகையடைவில் கோத்துப் பொருள் விளக்கிய பான்மையில் உள்ளது .
சிறப்புகள்
அறிவியல் சொற்கள்
வானிலை
–ராசி 12, மண்டலம் 3, 7, மாதங்கள் 12, அவற்றிற்குரிய நட்சத்திரங்கள்,
கிரகங்கள்
மருத்துவம் – உயிர் வேதனை 12, மூலம் 10 (சிறுபஞ்சமூலம், பெருபஞ்சமூலம்)
கணிதம்
சங்கலிதம் - கூட்டல்
விபகலிதம் - கழித்தல்
குணனம் - பெருக்கல்
பாகாரம் - பங்கிடல்
வர்க்கம் – சமமாகிய ஈரெண்ணின் பெருக்கம் ( square)
வர்க்கமூலம் – அவ்வர்க்கத் தொகையினின்ற தன்மூலமாகிய வரம்பறிதல்
கனம் - சமமாகிய மூவெண்ணின் பெருக்கம் (குழியைச் சமமாகப் பன்னிரு கோணப்படுத்துதல்
கனமூலம் - அக்கனத் தொகையினின்ற தன்மூலமாகிய ஒரு மூலையறிதல்
இசை – பண் - 4, இசை - 3,7, ராகத்தகுதி, 32 வகை ராகம், பாலை, பாவகை, பண்முறை, பண்கள் பாடப்படக்கூடிய நேரம், பண்களுக்குரிய தேவதைகள், தாளம், சந்தம் எனப்படும் வண்ணம், யாழ்ப்பெயர்கள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.