இவான் கார்த்திக்
இவான் கார்த்திக் (பிறப்பு:டிசம்பர் 31,1991) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். இலக்கிய இதழ்களில் கதைகள் எழுதி வருகிறர்.
பிறப்பு, கல்வி
இவான் கார்த்திக் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்மநாபன், சீதாலெட்சுமி இணையருக்கு டிசம்பர் 31, 1991-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நந்தகுமார், வைரவன் லெ.ரா. கோட்டாறு டிவிடி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். அரசு பொறியல் கல்லூரி கோயம்புத்தூரில் மின் மற்றும் மின்னனுவியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி செய்கிறார். பிப்ரவரி 21, 2022-ல் காயத்ரியை திருமணம் செய்து கொண்டார். மகள் விதுஷா.
இலக்கியவாழ்க்கை
இவான் கார்த்திக் முதல் படைப்பான ’கடுவா’ சிறுகதை 2020-ல் பதாகை மின்னிதழில் வெளியானது. இவருடைய பிற சிறுகதைகள் சொல்வனம், வனம் போன்ற மின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. முதல் நூல் ’பவதுக்கம்’ நாவல் 2022-ல் வெளியானது. தன் ஆதர்ச எழுத்தாளர்களாக அசோகமித்ரன், தாஸ்தாயெஸ்கி, சோபாசக்தி, ஜெயமோகன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
நாவல்
- பவதுக்கம்
இணைப்புகள்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.