உருவாக்கக் கால எழுத்துகள்

From Tamil Wiki
Revision as of 18:59, 10 February 2022 by Jeyamohan (talk | contribs)

தமிழில் நவீன உரைநடைப்புனைவுகள் உருவாகி வந்த காலகட்டத்தைச் சேர்ந்த படைப்புக்கள் உருவாக்க கால எழுத்துக்கள் எனப்படுகின்றன. இவை மரபான இலக்கியக் கதைகள், செவிவழிக் கதைகள், நாட்டார் கதைகள் ஆகியவற்றை உரைநடையில் சொல்லும் பாணியில் அமைந்தவை. பின்னர் ஆங்கிலம் வழியாக ஐரோப்பிய இலக்கியங்களை தழுவி எழுதப்பட்ட எழுத்துக்கள் உருவாயினர். உரைநடை இலக்கியம் தமிழில் உருக்கொள்வதற்கான எல்லா வழிகளும் இந்த வகை எழுத்துக்களில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 1850 முதல் 1900 வரையிலான எழுத்துக்களை இவ்வகையில் சேர்ப்பதுண்டு. இவ்வகை எழுத்துக்கள் மேலும் இருபதாண்டுகள் வந்துகொண்டிருந்தன.

நூல்பட்டியல்

  • வசன சம்பிரதாய கதை - முத்துக்குட்டிப் புலவர்
  • அசன்பே சரித்திரம் -சித்தி லெவ்வை மரைக்காயர்
  • பிரேமகலாவத்யம் - திரிசிரபுரம் சு.வை.குருசாமி சர்மா
  • மோகனாங்கி -தி.தசரவணமுத்துப்பிள்ளை
  • ஞானப்பிரகாசம் -ராஜாத்தி அம்மாள்
  • கமலினி -சருக்கை ராமசாமி ஐயங்கார்
  • மீதி இருள்- அருமைநாயகம்
  • மதிவாணன் - சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற்கலைஞர்)
  • லீலை- பலராமய்யர்
  • ஜீவரத்தினம்- மயிலை இராமலிங்க முதலியார்
  • மோகனசுந்தரி
  • பங்கஜவல்லி
  • ராதாராணி டி.ஏ.சாமிநாதய்யர்
  • மரகதவல்லி -ப.சி.கோவிந்தசாமி ராஜா
  • ஹனுமான் சிங்- பிரணதார்த்திஹர சிவம்
  • மங்கம்மாள்- கூடலிங்கம் பிள்ளை
  • கமலாக்ஷி
  • விஜயசுந்தரம்
  • ஞானசுந்தரம்
  • ஞானாம்பிகை
  • சிவஞானம்
  • ஞானப்பிரகாசம்
  • மணவினை கெடுத்தது ஒரு பெண் வேலை- ம.கொ.விஜயராகவ முதலியார்
  • விவேகரச வீரன் கதை- பாலசுப்ரமணிய பிள்ளை
  • ஹிதகரிணி -பண்டிதை விசாலாட்சி அம்மாள்
  • ஸுஜாதா
  • வனஸுதா
  • விஜயலக்ஷ்மி தேவகுஞ்சரி அம்மாள்
  • மீனலோசனி- மு.கோவிந்தசாமி ஐயர்
  • சத்தியவல்லி -ஆர்.பி.குழந்தைச்சாமிப்பிள்ளை
  • அக்ஞாதவாசம் அல்லது மாண்டவர் மீண்ட மாயம்-பி.எஸ்.நாராயணசாமி ஐயர்
  • கோமதி கோகிலமானது- என்.ஆர்.சுப்ரமணிய சர்மா
  • பத்மரேகை அல்லது கற்பகச்சோலை ரகசியம்-நாகை சி.கோபாலகிருஷ்ண பிள்ளை
  • தனபாலன்
  • சந்திரோதயம் அல்லது அலைகடல் அரசி
  • குமுதவல்லி- மறைமலை அடிகள்
  • கோகிலாம்பாள் கடிதங்கள்
  • ஜயலக்ஷ்மி- வரகவி அ.சுப்ரமணிய பாரதி
  • ஜடாவல்லவர்
  • விஜயபாஸ்கரன் அல்லது ஒரு குற்றத்துக்கு ஒன்பது குற்றம்
  • வேலையின் கூலி அல்லது கள்வர் கவர்ந்த கல்யாணப்பெண்- எம்.எஸ்.கிருஷ்ணசாமி சர்மா
  • மங்கல்யப்பிச்சை அல்லது கற்புக்கரசி- ஏகாம்பர முதலியார்
  • ஜெயசீலன் -மீனாட்சி சுந்தரம்மாள்
  • கிருபாம்பிகை-சோ.ரா.சீனிவாச பிள்ளை
  • ஞானகாந்தி- செ.மு.ராஜுசெட்டியார்
  • காதலி
  • அன்பானந்தம்
  • சந்திரசேகரி
  • நாகரீகம்
  • குசாவதி
  • செல்வராஜந் பி.ஆபிரகாம்
  • ராஜமகேந்திரம்
  • ராஜாம்பாள்
  • நோறாமணி- டி.எஸ்.துரைசாமி
  • வசந்தா
  • மனோகரி
  • சரஸா
  • கருங்குயில் குன்றத்துக் கொலை
  • ரமணி- சு.அ.சுப்ரமணிய பிள்ளை
  • சாரதாம்பாள் சரித்திரம் -எஸ்.ஏ.ராமசாமி ஐயர்
  • விஜயகாருண்யம்-ஏ.பாலகிருஷ்ணபிள்ளை
  • பொற்றொடி- குருமலை சுந்தரம்பிள்ளை
  • ஜகஜ்ஜோதி- எஸ்.சாமிநாதய்யர்
  • பரிமளா- எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு