அருணாசல புராணம்
அருணாசல புராணம் திருவண்ணாமலையில் கோவில் கொண்ட சிவனைப் பாடும் நூல். 16-ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலரால் இயற்றப்பட்டது. தற்போது அந்தப் புராணத்தின் மூலமும் உரையும் கொண்ட ஓலைச்சுவடி பிரதிகள் கிடைத்துள்ளன.
ஆசிரியர்
அருணாசல புராணத்தை இயற்றியவர் எல்லப்ப நாவலர். சைவ இலக்கியங்களை இயற்றியதால் சைவ எல்லப்ப நாவலர் எனப்பட்டார். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
நூல் அமைப்பு
காப்பு
வியாசரால் இயற்றப்பட்ட ஸ்காந்த புராணத்தின் ருத்திர சம்ஹிதையில் உள்ள அருணாசல சரித்திரத்தை தமிழில் இயற்றியதாக காப்புச் செய்யுளிலிருந்து அறியலாம்.
மிக்க வேதவியாசர் விளம்பிய
விக்க தைக்கியை யின்றருள் செய்திட
முக்கள் வெற்பினை மும்மத வாரியை
கைக்களிற்றினைக் கைதொழுதேத்துவாம்
சருக்கங்கள்
திருநகரச் சருக்கம்
நந்திதேவர் மார்க்கண்டேயருக்குக் திருவாரூர், சிதம்பரம் , காசி, காஞ்சிபுரம், ஸ்ரீசைலம், காளஸ்திரி, மதுரை , திருக்கேதாரம்,விரிஞ்சிபுரம்,விருத்தாச்சலம், திருவானைக்காவல், கும்பகோணம், திருவிடைமருதூர்,மற்றும் கங்கை நதி ஆகியவற்றின் சிறப்பைக் கூறி, அவைஅ அனைத்தையும் விட பெருமை வாய்ந்தது என அண்ணமலையைக் குறிப்பிடுகிறார். சத்தபுரி என்னும் 7 நகரங்கள் அயோத்தி,மதுரை,மாயாபுரி,காசி,காஞ்சி,அவந்தி,துவாரகை இவை ஒரு தட்டிலும் அருணாசலத்தை மற்றொரு தட்டிலும் வைத்து நிறுத்தபோது அருணாசலம் அதிக கனதியாக இருந்தது.இதற்கு முத்திநகரம்,ஞானநகரம்,தலேச்சுரம்,சுத்தநகரம்,தென்கயிலாயம் என்னும் பெயர்கள் உண்டு
திருமலைச் சருக்கம்
சிவனே மலையாக அமர்ந்த அண்ணாமலையின் பெருமை கூறப்படுகிறது. ஆரிடம்,இராக்கதம் ,அசுரம் ,தேவதத்தர்,மானிடம் ,சம்பு என்று நாம் இலிங்கங்களுக்குப் பெயர் சூட்டியுள்ளோம். ஆனால் இங்கு மலையே இலிங்கமாக உள்ளது. முதல் கிருத யுகத்தில் செங்கண் நிறம் ,திரேத யுகத்தில் மணி நிறம், துவாபர யுகத்தில் பொன் நிறம்,கலி யுகத்தில் கல் மலை என இந்த மலை விளங்கிற்று.
காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.
திருவவதாரச் சருக்கம்
சிவ பார்வதி திருமணம். தட்சனின் மகளாக பார்வதி வளர்ந்ததும் சிவ பார்வதி டிருக்கல்யாணமும் விவரிக்கப்படுகின்றன
திருக்கண் புதந்த சருக்கம்
பார்வதி சிவனின் கண்களை விளையாட்டாக மறைக்க ஏழுலகங்களும் இருண்டன. அதனல் சாபம் பெற்ற பார்வதி சிவனை மீண்டும் அடைய தவம் செய்ததும், அதைக் கணடு தேவர்கள் வருந்தியதும் கூறப்படுகிறது.
இடப்பாகம் பெற்ற சருக்கம்
தேவி மகிஷ்ஹசுரனை வதம் செய்ததும், சிவன் அவளுக்குத் தன் இடபாகத்தை அளித்து, மாதொருபாகனாகக் கோயில் கொண்டதும் சொல்லப்படுகின்றன.
வச்சிராங்கதபாணி சருக்கம்
வச்சிராங்கத பாண்டியன் என்ற அரசன் வேட்டையாடும்போது திருவண்ணாமலைக்கருகில் காட்டில் ஓர் புனுகுப்பூனையத் துரத்திச் சென்றான். பூனை பிடிகொடுக்காமல் ஓடியது. மன்னன் தன் குதிரையில் மலையச் சுற்றி பூனையத் துரத்தினான். ஓர் சுற்று முடிந்ததும் பூனையும் குதிரையும் மனிதர்களாயின. கந்தர்வர்கள் இருவர் துர்வாசரின் சாபம் பெற்று விலங்குகளாக மாறினர். மலையாகக் குடிகொண்ட சிவனைச் சுற்றி வலம் வந்தால் சாபவிமோசனம் என்பதால் அண்ணாமலையை வலம் வந்ததும் சாபவிமோசனம் பெற்றனர். விநாயகர் சிவ பார்வதியை வலம் வந்து மாம்பழம் பெற்ற கதையும் கூறப்படுகிறது.
வல்லாளமகராஜ சருக்கம்
திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராசன் மகப்பேறு இல்லாமல் கவலையுற்றிருந்தான். அறம் செய்ய விரும்பிய அவன் தன்னிடமுள்ள எதனையும் யார் வேண்டுமானாலும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என முரசறைந்து தெரிவித்தான். சிவபெருமான் அவனுக்கு அருள்புரிய விரும்பி ஒரு சங்கமர் (சைவத் துறவி) கோலத்தில் அவனிடம் வந்தார். சிற்றின்பம் நுகரத் தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று கேட்டார். அரசன் கணிகையரை அழைத்துவர ஆணையிட்டான். அப்போது கணிகையரின் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சங்கமர் இருந்தனர். எனவே யாரையும் அழைத்துவர முடியவில்லை. அப்போது அரசனின் இளைய மனைவி எல்லம்மா தேவி சங்கமர் கருத்துக்குத் தான் இசைவதாக வந்து சங்கமரைத் தொட்டாள். சங்கமர் குழந்தையாக மாறிவிட்டார்.குழந்தை மறைய சிவன் காட்சி தந்தார். வல்லாளன் இறுதிக் காலத்தில் அவனுக்குப் புத்திரனாக வந்து சடங்குகள் செய்து அரசனுக்கு முத்தி அளித்தார்.
தீர்த்தச் சருக்கம்
திருமலை வலம்புரிச்சருக்கம்
ஆதித்தச் சருக்கம்
பிரதத்தராசன் சருக்கம்
புளகாதிபச் சருக்கம்
பாவந்தீர்த்தச் சருக்கம்
அருணாசலத்தின் பெருமை
ந
சத்தபுரி ஏழு முதல் எடுத்து தலம் யாவும் ஒரு தட்டும் ஒரு தட்டு அதனிலே
அத் தலமும் இட்டு எதிர் நிறுக்க அவைகட்கு அதிகமானது ஒளிர் அந்த நகரம்
முத்திநகர் என்று பெயர் ஞானநகர் என்று பெயர் முத்தி அதிலேச்சுரம் எனும்
சுத்தநகர் என்று பெயர் தென்கயிலை என்று பெயர் சோணகிரி என்று பெயரே
ஆகாயம் முதலானவை என்று உளதோ அன்று முதலே இது உள்ளது. இது அழிவு இல்லாதது
ஒன்று உளது பூமிதனில் இன்று புதிதன்று உலகு முப்பரும் உயர்ந்த வெளியும்
என்று உளது அந்நாள் உளது வேத முடி மீதினில் இருப்பது அகலாமல் அதில் ஓர்
குன்றுதல் இல்லாத ஒரு வெற்பு உளது புண்டரிக கோளகையும் ஊடுருவியே
நின்று உளது தென் திசையில் என்றும் அழியாது நெடுநீர் உலகு வாழ்வு பெறவே .
ஆரிடம்,இராக்கதம் ,அசுரம் ,தேவதத்தர்,மானிடம் ,சம்பு என்று நாம் இலிங்கங்களுக்குப் பெயர் சூட்டியுள்ளோம். ஆனால் இங்கு மலையே இலிங்கமாக உள்ளது 29
முதல் கிருத யுகத்தில் செங்கண் நிறம் ,திரேத யுகத்தில் மணி நிறம், துவாபர யுகத்தில் பொன் நிறம்,கலி யுகத்தில் கல் மலை என இந்த மலை விளங்கிற்று.
காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.
அவதரச்சருக்கம் சிவ பார்வதி திருமணம். பார்வதி சிவனின் கண்களை விளையாட்டாக மறைக்க ஏழுலகங்களும் இருண்டன. அதனல் சாபம் பெற்ற பார்வதி சிவனை மீண்டும் அடைய தவம் செய்தாள். மகிஷாசுர வதமும், சிவன் இடபாகத்தை அளித்ததும் அட்
வச்சிராங்கத பாண்டியன் என்ற அரசன் வேட்டையாடும்போது திருவண்ணாமலைக்கருகில் காட்டில் ஓர் புனுகுப்பூனையத் துரத்திச் சென்றான். பூனை பிடிகொடுக்காமல் ஓடியது. மன்னன் தன் குதிரையில் மலையச் சுற்றி பூனையத் துரத்தினான். ஓர் சுற்று முடிந்ததும் பூனையும் குதிரையும் மனிதர்களாயின. கந்தர்வர்கள் இருவர் துர்வாசரின் சாபம் பெற்று விலங்குகளாக மாறினர். மலையாகக் குடிகொண்ட சிவனைச் சுற்றி வலம் வந்தால் சாபவிமோசனம் என்பதால் அண்ணாமலையை வலம் வந்ததும் சாபவிமோசனம் பெற்றனர். விநாயகர் சிவ பார்வதியை வலம் வந்து மாம்பழம் பெற்ற கதையும் கூறப்படுகிறது.
திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராசன் மகப்பேறு இல்லாமல் கவலையுற்றிருந்தான். அறம் செய்ய விரும்பிய அவன் தன்னிடமுள்ள எதனையும் யார் வேண்டுமானாலும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என முரசறைந்து தெரிவித்தான். சிவபெருமான் அவனுக்கு அருள்புரிய விரும்பி ஒரு சங்கமர் (சைவத் துறவி) கோலத்தில் அவனிடம் வந்தார். சிற்றின்பம் நுகரத் தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று கேட்டார். அரசன் கணிகையரை அழைத்துவர ஆணையிட்டான். அப்போது கணிகையரின் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சங்கமர் இருந்தனர். எனவே யாரையும் அழைத்துவர முடியவில்லை. அப்போது அரசனின் இளைய மனைவி எல்லம்மா தேவி சங்கமர் கருத்துக்குத் தான் இசைவதாக வந்து சங்கமரைத் தொட்டாள். சங்கமர் குழந்தையாக மாறிவிட்டார்.குழந்தை மறைய சிவன் காட்சி தந்தார். வல்லாளன் இறுதிக் காலத்தில் அவனுக்குப் புத்திரனாக வந்து சடங்குகள் செய்து அரசனுக்கு முத்தி அளித்தார்.
தீர்த்தச் சருக்கம் திருவண்ணமலையிலுள்ள தீரத்தங்களின் சிறப்பைக் கூறுகிறது.
திருமலைவலம்புரிச்சருக்கம் அண்ணாமலையை வலம் வருவதன் முறையையும், நற்பலன்களையும் விவரிக்கிறது
ஆதித்தச் சருக்கம் சூரியன் அண்ணாமலையை ஒரு அற்ப மலையென்று இகழ்ந்து, கடந்து செல்லும்போது மலையின் ஒளியாலும், வெப்பத்தாலும் சுருண்டு எரிந்து போய், பின்பு சாபவிமோசனம் பெற்ற கதையைக் கூறுகிறது.
சிவன் பொருளைக் கவர்ந்தவரும், கவர எண்ணியவர்களும் நலமாக இருந்தாலும், சிவனடியார் பொருளைக் கவர்ந்தவர், கவர நினைத்தவர் கெட்டொழிவது திண்ணம் என்று பிரமன் பிரதத்தராசன் கதையைக் கூறினார். சிவனைப் பாடும் பெண்ணை விருப்பமின்றி அடைய விரும்பியதாலேயே அரசன் முகம் குரங்கு-முகம் ஆயிற்று. சிவனை வழிபட்டு தன் பழைய முகத்தைப் பிரதத்தராசன் பெற்றான்
மனிதரும் தேவரும் அறிந்து செய்த பாவங்களை அண்ணமலையானைத் துதித்து தீர்த்துக்கொண்ட வரலாறு பிரம்மனால் சொல்லப்படுகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.