கொஸ்தான்
From Tamil Wiki
கொஸ்தான் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் எழுத்தாளர். பூதத்தம்பி விலாசம் என்னும் நூலின் ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
கொஸ்தான் இலங்கை மன்னார், மாந்தையைச் சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
கொஸ்தான் 'பூதத்தம்பி விலாசம்' நூலை எழுதினார். 1888-ல் மயிலிட்டி நல்லையாபிள்ளை இந்நூலை வெளியிட்டார். யாழ்ப்பாண நாட்டின் நாயகன் பூதத்தம்பி பற்றிய நாடகங்கள் பலவும் பூதத்தம்பி விலாசம் நூலைத் தழுவி அரங்கேற்றப்பட்டவை.
நூல் பட்டியல்
- பூதத்தம்பி விலாசம்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை கொஸ்தான்: நூலகம்
இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.